தமிழகத்தில் அமெரிக்க முதலீட்டுக்கு பெரும் வாய்ப்பு –ஜெ.யிடம் ஹிலாரி உறுதி |
தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய பெரும் வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.
சென்னைக்கு வருகை தந்த ஹிலாரி கிளிண்டன், கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதாவ இன்று மாலை சந்தித்தார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் ஆகியோரை சந்தித்து பேசினார்.