பட்ஜெட்டை விளக்கி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவு

 தமிழக பட்ஜெட்டைவிளக்கி தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.

மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசின் முதல் பட்ஜெட் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல் முறையாக நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இதில் தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ. 1லட்சம் கோடியை தாண்டியுள்ளது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ரூ. 8900 கோடி அளவுக்கு திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுளளன.

சென்னை தூய்மைப் பகுதியாகிறது... ஹெலிகாப்டர் மூலம் ஜெ ஆய்வு!

 சென்னை மாநகர் முழுவதையுமே தூய்மைப் பகுதியாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக சென்னையை சுற்றியுள்ள குப்பை கிடங்குகளை முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.