அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச லேப்-டாப்

இந்த நிதியாண்டில் (2011-2012) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் கலை அறிவியல், கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின்