பொங்கல் முதல் இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: ஜெ தீவிரம்

அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்ததைத் போல கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா தீவிர ஆலோசனை நடத்தினார்.

பொங்கல் முதல் இந்தத் திட்டத்தைத் தொடங்க அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் திட்டத்துக்கு தடை இல்லை!-உச்சநீதிமன்றம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக, இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும், அறிவித்திருந்தார்.

தேர்தலில் அமோக வெற்றி பெற்றதும் தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் ஜெயலலிதா.