உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 3 பேர் குழு-ஜெ அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து பேச்சு நடத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்ட 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் 2 வாரத்திற்குள் அறிவிக்கப்படவுள்ளது.