தோள்களில் சூடி அழகு பார்க்க வெற்றி மாலை காத்திருக்கிறது, கண்ணியத்தோடு பெறுவோ்-ஜெ.

தமிழக வாக்காளர்களின் பேராதரவு நம்முடைய இயக்கத்திற்கு இருக்கிறது. வெற்றி மாலையை கழகத்தின் தோள்களில் சூடி அழகு பார்க்க, பெருமை கொள்ள தமிழ்நாடே காத்திருக்கிறது. நாம்தான் கண்ணியத்தோடு அந்த வெற்றி மாலையை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணிவினை பெறவேண்டும். அதற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும், ஒற்றுமையான முயற்சியும் மிகமிக அவசியம் என்பதை நான் வலியுறுத்திக்கூற விரும்புகிறேன் என்று அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்திற்கு மின்வரத்து குறைந்தது-தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: ஜெ.

தெலுங்கானா போராட்டம், ஒரிசா வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு வரும் மின்சாரத்தின் அளவு 1000 மெகாவாட்டுக்கும் மேலே குறைந்து விட்டது. நிலைமையை சமாளிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் மின் நிர்வாகத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக சென்னை நீங்கலாக மாநிலத்தின் பிற இடங்களில் இருந்து வந்த மூன்று மணி நேர மின் தடை 1.7.2011 முதல் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது

திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று சூறாவளிப் பிரசாரம் செய்யவுள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். இத்தொகுதியில் திமுக சார்பில், நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு களமிறக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையாக உள்ளது. இதனால் அதிமுகவினர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இந்தியாவின் மீதான தாக்குதலுக்கு சமம்: ஜெ.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருத வேண்டும். இது உள்ளூர் பிரச்சினை அல்ல, தேசியப் பிரச்சினை. எப்படி பாகிஸ்தான் படையினர் எல்லைப் பகுதியில் தாக்குவதை மத்திய அரசு சீரியஸாக கருதுகிறதோ, அதே போல இலங்கைப் படையினரின் தாக்குதலை மத்திய அரசு இனியாவது கருத வேண்டும். இலங்கைக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய வெளியுறவுச்செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் கண்டிப்பு கலந்த குரலில் கூறியுள்ளார்.