எனது ஆட்சியில் 2வது பசுமைப் புரட்சி ஏற்படும்: ஜெயலலிதா நம்பிக்கை

எனது ஆட்சியில் தமிழகத்தில் 2வது பசுமைப் புரட்சி ஏற்படும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தொடங்கிய மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது,

நம் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் அதற்குத் தடையாக இருக்கும் ஊழலை முதலில் ஒழி்கக வேண்டும். ஆட்சித் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஆட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகளால் தான் முடியும். எனவே மக்கள் நலத் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்.

திருநெல்வேலியில் ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு வளாகம் – ஜெ. அனுமதி

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பண்பாட்டு மையம், அரசு இசைப் பள்ளி, கலை மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலை பண்பாட்டு வளாகம் ஒன்றை ஒரு கோடி ரூபாய் செலவில் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

கலை பண்பாட்டு வளாகம்

சொந்த கட்டிடங்களில் காவல் நிலையங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ரூ.5 கோடியே 14 லட்சம் செலவில் 11 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

'சாலை விபத்து விசாரணை வழிமுறை' திட்டம்: முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்

 'சாலை விபத்து விசாரணை வழிமுறை' என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார். சாலை விபத்து விசாரணைக்கு உதவியாக இருக்கும் நவீன கருவிகளையும், வாகனங்களையும் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு அவர் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை, உலக வங்கி திட்டத்தின் கீழான தமிழ்நாடு நகர வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் சாலை விபத்து விசாரணை வழிமுறை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தினமும் வரும் 3 ஆயிரம் கோரிக்கை மனுக்கள்

 தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தினமும் 3 ஆயிரம் விண்ணப்ப மனுக்கள் குவிந்து வருவதாக தனிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனுக்கள் உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் எனது அரசு வேரறுக்கும்- ஜெயலலிதா உறுதி

தமிழகத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள், நில அபகரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறைக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அரசின் முக்கியத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் மிக முக்கிய பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உள்ளது. மேலும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.

இதன் காரணமாக இவர்களை அவ்வப்போது நேரில் அழைத்து மாநாடு நடத்துவது மாநில முதல்வர்களின் வழக்கமாகும். அந்த வகையில் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்த மாநாட்டுக்கு ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார். இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.