பெத்திக்குப்பத்தில் 79 கோடியில் நவீன சோதனைச்சாவடி - ஜெ. அறிவிப்பு

 திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பெத்திக்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியாக உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தச் சோதனைச் சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட 79 கோடியே, 77 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்- அதிமுக சார்பில் போட்டியிட 2 பேர் தேர்வு செய்த ஜெ.- மதிமுகவும் ரெடி

 சங்கரன் கோவில் இடைத் தேர்தலை சந்திக்க மதிமுகவும், அதிமுகவும் தயாராகி விட்டன. இரு கட்சிகளிலும் வேட்பாளர்களும் கூட தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியிலிருந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அமைச்சரவையில் அமைச்சராக கருப்பசாமி பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு விரைவில் இடைதேர்தல் நடைபெற உள்ளது. 

உத்தபுரம் பிரச்சனை: ஜெயலலிதாவுக்கு இந்து முன்னணி பாராட்டு

 உத்தபுரத்தில் ஒரு ஜாதி பிரச்சனையைத் தீண்டாமைப் பிரச்சனையாக மாற்றி, தலித் விரோதமாகச் சித்தரித்து ஊதி ஊதி பெரிதாக்கியது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி என்றும், இந்தப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு கண்ட தமிழக அரசை பாராட்டுவதாகவும் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.