உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,053 கோடி நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு

அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாநில நிதி ஆணைய மானியமாக ரூ.3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது ஊரக வளர்ச்சி என்பதால், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்க டிச 15ம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்-ஜெ. அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 15ம் தேதி தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு பிரச்சனை தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்திற்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்கள் கொடுத்து, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு நம்புகிறது.