சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பான ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணம் பாராட்டுக்குரியது-ஜெயந்தி நடராஜன்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு தெரிவிக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

சென்னை வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையை தூய்மையாக ஆக்குவதற்கு ஒரு முயற்சியின் அங்கமாக ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த அணுகுமுறையை வரவேற்கிறேன்.