இன்று முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு- ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் அரசு கேபிள் டிவி சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் சென்னையில் மட்டும் இது தொடங்கப்படவில்லை.

ரூ. 70 என்ற குறைந்த கட்டணத்திற்கு 90 சேனல்கள் வரை இந்த கேபிள் டிவி மூலம் வழங்கப்படும். இந்த 70 ரூபாயில், 20 ரூபாயை, கேபிள் டிவி நிறுவனங்கள், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.