அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு – சபாநாயகர் பேட்டி

அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு - சபாநாயகர் பேட்டிஅனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு - சபாநாயகர் பேட்டி

சென்னை, மே 30: தமிழக சட்டமன்றத்தில் பேச அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என்று சபாநாயகர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை கோட்டையில் நிருபர்களிடம் இன்று அவர் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவையில் 233 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்று உள்ளார்கள். ஒரு இடம் காலியாக உள்ளது. நியமன உறுப்பினர் நியக்கப்பட்டதும் அவர் பதவி ஏற்றுக் கொள்வார்.

சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு சட்டமன்ற விதிகளின் படி இருக்கைகள் ஒதுக்கப்படும். சட்டமன்றத்தில் பேச அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். சட்டசபையில் நான் ஆற்றிய உரையிலும் இதை குறிப்பிட்டு இருக்கிறேன்.

மூன்றாம் தேதி தொடங்கும் பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

இவ்வாறு சபாநாயகர் ஜெயக்குமார் கூறினார்.

No comments:

Post a Comment