தீபாவளி திருநாளில் இருள் அகன்று எங்கும் மகிழ்ச்சி ஒளிச்சுடர் ஒளிரட்டும்: ஜெயலலிதா வாழ்த்து

இந்த தீபாவளித் திருநாளில் நோக்கும் இடமெல்லாம் களிப்பும், இனிமையும் நீக்கமற நிறையட்டும்; நிம்மதி பெருகட்டும்; உலகம் முழுமையும் அக இருளும், புற இருளும் அகன்று எங்கும் மகிழ்ச்சி ஒளிச்சுடர் ஒளிரட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தில் கூறியிருப்பதாவது,

நாடு முழுவதும் மகிழ்ச்சிப் பொங்க உற்சாகத்துடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சுடர்விடும் தீபங்களின் ஒளி போல மக்கள்