அ.தி.மு.க. செயற்குழு 20-ந்தேதி கூடுகிறது – ஜெ. அறிவிப்பு ADMK

அதிமுக செயற்குழு இம்மாதம் 20-ம் தேதி கூடுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment