நாளை அதிமுக செயற்குழு கூடுகிறது

அதிமுக செயற்குழு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக தலைமைச் செயலகத்தில் கூடுகிறது. அதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டமும் நடக்கிறது.

அதிமுக செயற்குழு கூட்டம் ஜூலை 30ம் தேதி நடக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். அறிவித்தபடி இந்த கூட்டம் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக தலைமை செயலகத்தில் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கிறது.

இதற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். இதில் 275 பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் சிலர் கலந்து கொள்கின்றனர்.

கட்சியின் வளர்ச்சிப் பணிகள், அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுதல், தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றும் ஜெயலலிதா கட்சியினருக்கு அறிவுரைகள் வழங்கவிருக்கிறார்

No comments:

Post a Comment