நடிகர் ரவிச்சந்திரன் மறைவு – ஜெயலலிதா இரங்கல்


உடல்நம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரவிச்சந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, இதயக் கமலம், அதே கண்கள் உள்பட சுமார் 180 திரைப்படங்களில் முத்திரை பதித்து, தமிழ் திரைப்பட ரசிகர்களால் “வெள்ளி விழா நாயகன்” என்று போற்றப்பட்டு அவர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
1964-ஆம் ஆண்டு தனது கலைப்பயணத்தை தொடங்கி, சமீப காலம் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரவிச்சந்திரனுடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பரிணமித்தவர் ரவிச்சந்திரன்.   ரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment