106 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த ஜெயலலிதா

106 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

106 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி புதிய பேருந்துகள் துவக்க விழா சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் இன்று காலை நடந்தது. இந்த எளிமையான விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.

அவர் அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய பேருந்துகள் சென்னை, விழுப்புரம், மதுரை, நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment