டெல்லியில் அதிமுக கொடி பறக்கும் – அமைச்சர் பேச்சு

விழுப்புரம், ஜூலை 18: டெல்லியே ஜெயலலிதாவை எதிர்பார்க்கிறது. விரைவில் அங்கு அதிமுக கொடி பரக்கும் என்று தமிழக அமைச்சர் சண்முகம் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்
விழுப்புரம் மாவட்ட (வடக்கு) அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:

9 இடங்களில் புதிய கலை, அறிவியல் அரசு கல்லூரிகள் – ஜெ இன்று தொடங்கி வைக்கிறார்

ஸ்ரீரங்கம், நெம்மேலி உள்ளிட்ட 9 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில், 18 அரசு மகளிர் கல்லூரிகள் உள்பட 62 அரசு கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டும் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, ராணிமேரி மகளிர் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி ஆகிய 3 அரசு மகளிர் கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில், 9 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்படுகின்றன.
இவை, அரசு கல்லூரிகளாக இல்லாமல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே, அரசு கல்லூரிகளாக அல்லாமல், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் 19 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலமைச்சரின் தொகுதியான ஸ்ரீரங்கம் உட்பட 9 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) கோட்டையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார்.
இந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல், அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இவை தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கான செலவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே ஏற்கும்.
கல்லூரி தொடங்கப்படும் இடங்களும், அதற்கான பல்கலைக்கழகங்களும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு: