டெல்லியில் அதிமுக கொடி பறக்கும் – அமைச்சர் பேச்சு

விழுப்புரம், ஜூலை 18: டெல்லியே ஜெயலலிதாவை எதிர்பார்க்கிறது. விரைவில் அங்கு அதிமுக கொடி பரக்கும் என்று தமிழக அமைச்சர் சண்முகம் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்
விழுப்புரம் மாவட்ட (வடக்கு) அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:

இந்தியாவில் உற்று நோக்கும் ஒரே தலைவியாக ஜெயலலிதா இருப்பதாக டெல்லியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். ஊழலால் காங்கிரஸ் அழிந்து வருகிறது. பாஜகவில் ஒற்றுமை இல்லை.
தெளிவான அறிவாற்றல் உள்ள காரணத்தால் டெல்லிக்கு சென்று தைரியமாக ஜெயலலிதா பதிலளிக்கிறார். செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பிரதமர் திணறுகிறார். டெல்லியே ஜெயலலிதாவை எதிர்பார்க்கிறது. டெல்லியில் விரைவில் அதிமுக கொடி பறக்கும்.
இவ்வாறு சண்முகம் பேசினார்.

No comments:

Post a Comment