8 மாத குழந்தையின் ஆபரேஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி

8 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ. 62 ஆயிரத்திற்கான காசோலையை அக்குழந்தையின் தந்தையிடம் வழங்கினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இந்திரா நகரில் வசிக்கும் மா. சங்கரசுப்பு அவர்களின் 8 மாத குழந்தை மதிலட்சுமியின் இதய அறுவை சிகிச்சைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 62 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.

ரூ.41 கோடியில் 12 புதிய பாலங்கள்: ஜெ. திறந்து வைத்தார்

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையால் ரூ.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சென்னை மாநகரின் போக்குவரத்து மிகுந்த மிக முக்கியமான சாலை யான ஈ.வெ.ரா. பெரியார் சாலை, சென்னை அமைந்தகரை கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலப்பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டப்பணிகளின் கீழ் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக புதிய பாலம், வேலூர் மாவட்டம், பாணாவரம் என்ற இடத்தில் ரயில்வே கடவில் 11 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாலம், திருவாரூர் மாவட்டம்,

தமிழக பள்ளிகளில் மதிய உணவைப் போல விரைவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்

தமிழகத்தில் தற்போது மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வருவதைப் போல, விரைவில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி லட்சக்கணக்கான ஏழை பெற்றோர்களின் மனதில் பால் வார்த்தார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கூடங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.

தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைக்கும் ஜெயலலிதா: அமைச்சர் செந்தூர் பாண்டியன்

நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா என்று கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை நகராட்சியில் சாலை பாதுகாப்பு விளம்பர பலகைகள், சிறுமின் கோபுர திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஆதிமுலம், சுகாதார பணிகள் இணை இயக்குநர் அருண்மொழி, துணை இயக்குனர் மீராமைதீன் உள்பட பலர்