அதிமுகவின் 44-வது ஆண்டு விழா: எம்ஜிஆர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர்

அ.தி.மு.க.வின் 44-வது ஆண்டு விழாவையொட்டி கோத்தகிரியில் உள்ள எம்ஜிஆர் உருவப் படத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ம
லர் தூவி மரியாதை செலுத்தினார்.
விழா நடைபெற்ற இடத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை, அமைச்சர்கள் ஓ பன்னீர் செல்வம். ஆர்.டி உதயகுமார் மற்றும் நீலகிரி எம்.பி அர்ஜூன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தி, அ.தி.மு.க-வின் கட்சிக் கொடியை ஏற்றினார்.
தொடர்ந்து அதிமுக-வின் விழா மலரை ஜெயலலிதா வெளியிட அமைச்சர் ஆர்.டி உதயகுமார் பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, அண்மையில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்திருந்த 5 தனியார் நிறுவனங்கள் சார்பில் 5 பேருக்கு வேலைவாய்ப்புக்கான நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் அதிமுக-வின் மக்களவை, மாநிலங்கவை உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment