உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் நிதிஉதவி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்:
உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிதிஉதவி
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை, அக்.23-திருச்சி அருகே நடந்த அரசு பஸ்-லாரி மோதலில், உயிர் இழந்தவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பஸ்-லாரி மோதல்திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி சென்னை தேசிய நெடுஞ்சாலை, இருங்களூர் கிராமம் அருகே 20-10-2015 அன்று சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்றுகொண்டிருந்த அரசு பஸ், சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில், அரசு பஸ்சில் பயணம் செய்த சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த திருமாலின் மனைவி கோட்டீஸ்வரி, மகன் ஆத்திராஜ், மேடவாக்கத்தைச் சேர்ந்த பால்ராஜின் மகன் சுபின், திருநெல்வேலி மாவட்டம், புலிமான்மங்கலத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் வினோத், சிந்துபூந்துறை பகுதியைச் சேர்ந்த நெல்லையப்பனின் மகன் ஹரிகணேஷ்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடியைச் சேர்ந்த ராஜதுரையின் மகள் அன்னம்மாள், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த கென்னடிராஜின் மகன் மனோஜ், மார்த்தாண்டம், களியன்விளைவீடு பகுதியைச் சேர்ந்த கப்ரியேலின் மகன் ஜின்னிஸ்ஹெட்மெட் மற்றும் அகஸ்தீஸ்வரம், கீழகோணம் பகுதியைச் சேர்ந்த ஜேசுரத்தினத்தின் மகன் ஆண்டோசஞ்சு ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இரங்கல்இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விபத்தில் 15 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்திட மருத்துவமனை அதிகாரிகளுக்கும், திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிதி உதவிஇந்த விபத்து குறித்த தகவல் எனக்குக் கிடைக்கப்பெற்றதும், எனது உத்தரவின்பேரில், அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.பி.பூனாட்சி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அரசு கொறடா ஆர்.மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து உரிய மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தும், தேவையான நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டும் வருகிறார்கள். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் உடல் களை அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் கொண்டுசெல்லவும் நான் ஆணையிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அமைச்சர்கள் வழங்கினார்கள்விபத்தில் மனைவி மற்றும் மகனை இழந்த கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த திருமால் என்பவரின் வீட்டிற்கு அமைச்சர்கள் பா.வளர்மதி, பி.தங்கமணி, எஸ்.கோகுலஇந்திரா ஆகியோர் சென்று, அரசின் சார்பில் உடல்களுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகளை திருமாலிடம் வழங்கினர். உடன் சென்னை கலெக்டர் எ.சுந்தரவல்லி, எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment