கழக நிரந்தர பொது செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் சட்டசபையில் அறிவித்த திட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் கலை, அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படும்

சட்டசபையில்   முதல்-அமைச்சர்  ஜெயலலிதா அறிவித்த திட்டம்
ஆர்.கே.நகர் பகுதியில் கலை, அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படும்
ரூ.8 கோடியே 28 லட்சம் வழங்க ஜெயலலிதா உத்தரவு
சென்னை, அக்.23-சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கலை, அறிவியல் கல்லூரி இந்த ஆண்டே செயல்படுகிறது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-ஜெயலலிதா அறிவித்ததுகடந்த 4½ ஆண்டுகளில் தமிழகத்தில் 4 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட 53 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே உயர் கல்வித்துறைக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் காரணமாக 2011-ம் ஆண்டில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் தற்போது 42.8 சதவீதமாக எட்டி இந்தியாலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.இந்த ஆண்டு முதல் செயல்படும்ஜெயலலிதா அறிவித்ததன் அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைபள்ளியில் தற்காலிகமாக 2015-2016 கல்வி ஆண்டு முதல் செயல்படுவதற்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இக்கல்லூரியில் பணியாற்றுவதற்காக 11 ஆசிரியர் மற்றும் 17 ஆசிரியரல்லாத பணியிடங்களை உருவாக்குவதற்கு தொடர் செலவினமாக 77 லட்சத்து 7 ஆயிரத்து 800 ரூபாய், கல்லூரிக்கென மரத்தளவாடங்கள், புத்தகங்கள், கணினிகள் மற்றும் இதர தளவாடங்கள் வாங்குவதற்காக தொடரா செலவினமாக 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் இக்கல்லூரிக்கென புதிய கட்டிடம் கட்டுவதற்காக 7 கோடியே 25 லட்சம் ரூபாய், என மொத்தம் 8 கோடியே 28 லட்சத்து 57 ஆயிரத்து 800 ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment