டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுமார் 29,000 பேர் போனஸ் பெறவிருக்கின்றனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்கள் சி மற்றும் டி பிரிவுகளை சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 2010-11ம் ஆண்டிற்கான 8.33 சதவீத போனசும், 11.67 சதவீத கருணைத் தொகையும் ஆக மொத்தம் 20 சதவீத போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி ஏறத்தாழ 29 ஆயிரம் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் மொத்தம் ரூ. 20 கோடியே 92 லட்சம் ரூபாய் போனசாக பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment