முத்துராமலிங்கத் தேவரின் வாரிசு வெள்ளைச்சாமி தேவர் மரணம்- ஜெ. இரங்கல்

வெள்ளைச்சாமி தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசான வெள்ளைச்சாமி தேவர் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாரிசுகளில் ஒருவருமான என். வெள்ளைச்சாமி தேவர் இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.



வெள்ளைச்சாமி தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தினை சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment