6 புதிய தமிழக அமைச்சர்களும் பதவியேற்றனர்

 தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 6 அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சண்முக வேலு, ஆர்.பி.உதய குமார், எஸ்.பி.சண்முக நாதன், என்.ஆர்.சிவபதி, ஜி.செந்தமிழன், புத்திசந்திரன் ஆகிய 6 பேர் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமையன்று பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு - ஆறு புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு

கட்சியில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்து விசுவாசமாக உழைத்ததற்கு பரிசாக தமிழக அமைச்சரவையில் 6 புதிய அமைச்சர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

தமிழக அமைச்சரவை நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 16-ம் தேதி பொறுப்பேற்றது. நான்கு மாதங்களில் நான்காவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று தமிழக அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஆறு பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சம் எங்கும் தியாகச் சிந்தனைகள் பரவி நிற்கட்டும்- ஜெயலலிதா பக்ரீத் வாழ்த்து

இதயம் முழுவதும் இறை உணர்வு பொங்கிப் பெருகட்டும், நெஞ்சம் எங்கும் தியாகச் சிந்தனைகள் பரவி நிற்கட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பக்ரீத் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விடுத்துள்ள செய்தியில், தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஈரோடு ஆம்னி பஸ் விபத்தில் 8 பேர் பலி-ஜெ. ரூ. 1 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு

ஈரோடு அருகே டேங்கர் லாரியுடன் ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானதற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், சூரியம்பாளையம் கிராமம், சித்தோடு அருகில் 6.11.2011 அன்று பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, எரிபொருள் திரவம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியின் மீது மோதியதால், டேங்கர் லாரியில் இருந்த எரிபொருள் பேருந்தில் சிதறி, அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டதில், பேருந்து ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயும், மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும்

மழை பலி இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு- ஆடு, கோழிகளை இழந்தோருக்கும் நிவாரணம்-ஜெ. அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா
மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாடுகளை இழந்தோருக்கு ரூ. 20,000மும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 2000மும், கோழிகளை இழந்தவர்களுக்கு ரூ. 100ம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று புகார்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் சரிவர இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று நள்ளிரவு நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் 14 பேர் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

முத்துராமலிங்கத் தேவரின் வாரிசு வெள்ளைச்சாமி தேவர் மரணம்- ஜெ. இரங்கல்

வெள்ளைச்சாமி தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசான வெள்ளைச்சாமி தேவர் மரணமடைந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாரிசுகளில் ஒருவருமான என். வெள்ளைச்சாமி தேவர் இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.