Showing posts with label தமிழக பட்ஜெட் 2011. Show all posts
Showing posts with label தமிழக பட்ஜெட் 2011. Show all posts

தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டத்துக்கு ரூ. 912 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு, தனது இலவச லேப்டாப் திட்டத்துக்கு ரூ. 912 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்ததாவது:

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் அனைத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவசமாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த பொன்னாளான செப்டம்பர் 15-ந்தேதி அன்று இத்திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும். ஊரகப்

இணைத்து பெருநகர் காவல் ஆணையம் அமைப்பு- பட்ஜெட்

சென்னை மாநகர காவல் ஆணையத்தையும், புறநகர் காவல் இணையத்தையும் இணைத்து பெருநகர காவல் ஆணையம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையின் செயல்பாட்டை சீராகவும், சிறப்பாகவும் மேம்படுத்தும் பொருட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையத்துடன், செங்கை கிழக்கு காவல் மாவட்டம் இணைக்கப்பட்டு பெருநகர் காவல் ஆணையரகம் ஏற்படுத்தப்பட்டது.