Showing posts with label tn govt. Show all posts
Showing posts with label tn govt. Show all posts

பெத்திக்குப்பத்தில் 79 கோடியில் நவீன சோதனைச்சாவடி - ஜெ. அறிவிப்பு

 திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பெத்திக்குப்பத்தில் உள்ள சோதனைச் சாவடியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியாக உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இந்தச் சோதனைச் சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட 79 கோடியே, 77 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு மின்வரத்து குறைந்தது-தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: ஜெ.

தெலுங்கானா போராட்டம், ஒரிசா வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு வரும் மின்சாரத்தின் அளவு 1000 மெகாவாட்டுக்கும் மேலே குறைந்து விட்டது. நிலைமையை சமாளிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன் மின் நிர்வாகத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக சென்னை நீங்கலாக மாநிலத்தின் பிற இடங்களில் இருந்து வந்த மூன்று மணி நேர மின் தடை 1.7.2011 முதல் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இந்தியாவின் மீதான தாக்குதலுக்கு சமம்: ஜெ.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருத வேண்டும். இது உள்ளூர் பிரச்சினை அல்ல, தேசியப் பிரச்சினை. எப்படி பாகிஸ்தான் படையினர் எல்லைப் பகுதியில் தாக்குவதை மத்திய அரசு சீரியஸாக கருதுகிறதோ, அதே போல இலங்கைப் படையினரின் தாக்குதலை மத்திய அரசு இனியாவது கருத வேண்டும். இலங்கைக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய வெளியுறவுச்செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் கண்டிப்பு கலந்த குரலில் கூறியுள்ளார்.

மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச மின் அடுப்பு வழங்கப்படும்- ஜெயலலிதா

நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச மின் அடுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட பல்வேறு நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டம்- நாளை தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா

திருவள்ளூரில் நாளை நடைபெறும் பிரமாண்ட விழாவில், தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு மாடுகள், லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தில் நாளை முதல் இலவசப் பொருட்களின் விநியோகம் தொடங்குகிறது.

அ.தி.மு.க. அரசின், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த இலவச கிரைண்டர், மிக்சி, மின் விசிறி உள்ளிட்ட இலவச திட்டங்களை நாளை முதல்வர் ஜெயலலிதா நாளை திருவள்ளூரில் துவக்கி வைக்க உள்ளார்.

இன்று முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு- ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் அரசு கேபிள் டிவி சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் சென்னையில் மட்டும் இது தொடங்கப்படவில்லை.

ரூ. 70 என்ற குறைந்த கட்டணத்திற்கு 90 சேனல்கள் வரை இந்த கேபிள் டிவி மூலம் வழங்கப்படும். இந்த 70 ரூபாயில், 20 ரூபாயை, கேபிள் டிவி நிறுவனங்கள், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச லேப்-டாப்

இந்த நிதியாண்டில் (2011-2012) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் கலை அறிவியல், கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின்

புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimester' கல்வி முறை அறிமுகம்!

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக கல்வித் திட்டத்தில் சில மாற்றங்களை சட்டசபையில் ஜெயலலிதா இன்று அறிவித்தார். அதன் விவரம்:

சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பான ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணம் பாராட்டுக்குரியது-ஜெயந்தி நடராஜன்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு தெரிவிக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

சென்னை வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையை தூய்மையாக ஆக்குவதற்கு ஒரு முயற்சியின் அங்கமாக ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த அணுகுமுறையை வரவேற்கிறேன்.