Showing posts with label vaiko. Show all posts
Showing posts with label vaiko. Show all posts

சட்டமன்ற தீர்மானம் மூலம் வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் ஜெயலலிதா- வைகோ புகழாரம்

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா வரலாற்றுப் புகழ் பெற்று விட்டார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசு தலைவருக்கு வேண்டுகோள்விடுத்து, ஒரு மனதாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.

அணைகள் பாதுகாப்பு சட்டம்: ஜெ.வுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்டும்: வைகோ

திருநெல்வேலி: மத்திய அரசின் புதிய அணை மசோதாவை எதிர்த்து அனைத்து கட்சிகளு்ம் போராட வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுப்பியுள்ள குரலுடன் இணைந்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நெல்லையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி மதிமுக தென்மண்டல மாநாடு நடக்க உள்ளது. இது தொடர்பாக நெல்லை புறநகர், மாநகர், விருதுநகர், தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளை, நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.