Showing posts with label tamilnadu cm amma fund for sports players. Show all posts
Showing posts with label tamilnadu cm amma fund for sports players. Show all posts

கழக நிரந்தர பொது செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்

மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்
சென்னை, அக்.24-மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மின்சாரம் தாக்கி...இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-வேலூர் மாவட்டம், அரக்கோணம் கிழக்குப்பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த அன்வர்த்திகான்பேட்டை, கீழ்ஆவதம் பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்பவர் 6.6.2015 அன்று இந்திய கப்பற்படை வளாகம் அருகே மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், திருமானூர் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சேகர் 11.6.2015 அன்று முடிகொண்டான் கிராமத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தால் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மின்கம்பம் சாய்ந்து விழுந்ததுசேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் வடக்குப் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மஸ்தூராகப் பணிபுரிந்து வந்த சரவணன், ஜலகண்டாபுரத்தில் மின்கம்பம் நடும் பணியை மேற்கொண்டிருந்த போது, கம்பம் சாய்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், மேலத்திருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் 26.6.2015 அன்று காளப்பன்பட்டி கிராமத்தில் மின் இணைப்பை பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.தலா ரூ.3 லட்சம்இந்த துயரச் சம்பவங்களில் அகால மரணமடைந்த விநாயகம், சேகர், சரவணன் மற்றும் பாண்டியன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

கழக நிரந்தர பொது செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வாள்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு ரூ.2 லட்சம் பரிசு

போட்டியில் பங்கேற்கவும் நிதி உதவி அளித்தார்:
வாள்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற பவானிதேவிக்கு ரூ.2 லட்சம் பரிசு

சென்னை, அக்.23-சர்வதேச வாள்சண்டை போட்டியில் கலந்து கொள்ள தமிழக வீராங்கனை பவானிதேவிக்கு நிதிஉதவி வழங்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இப்போது போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்கும் பாராட்டி ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.ஜெயலலிதா வாழ்த்துதமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க வசதியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்கினார்.இந்த நிலையில் சர்வதேச போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய அவருக்கு மேலும் ரூ.2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சி.ஏ.பவானிதேவிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-பெல்ஜியத்தின் கென்ட் நகரில் நடந்த 18-வது பிளமிஷ் ஓபன் வாள்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நீங்கள் வெண்கலப்பதக்கம் வென்றதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதன் மூலம் தேசத்தையும், தமிழகத்தையும் பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள். சாதனை புரிந்த உங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.ரூ.2 லட்சம் பரிசுஇந்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றமைக்காக உங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பு பரிசு, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கடினமாக தயாராவதற்கும், எதிர்காலத்தில் பல வெற்றிகளை நாட்டிற்கும், தமிழகத்திற்கும் கொண்டு வருவதற்கும் உங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.